Posts

Showing posts from July, 2018

வலை - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

Image
பாலசுப்ரமணியன்   பொன்ராஜ் எழுதிய சிறுகதை அ குறுநாவல் வலை - அவரது பிற புனைவு முயற்சிகளிலிருந்து தனித்துத் தெரிவது. துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை தொகுப்பில் எனக்குப் பிடித்த கதையும் இது தான். குறிப்பாக கதையின் தொடக்கம் யதார்தத்தை மீறிய தளத்தில் உண்மைக்கும் புனைவு எனும் கற்பிதத்துக்கும் இடையே ஊசலாடும் இழைகளைத் தொட்டுச் செல்கிறது. வெளிச்சத்தில் மட்டுமே தெரியும் சிலந்தியின் வலை எனச் சொல்லத் தொடங்கும்போது வெளிச்சமில்லாமல் தெரியும் பிற உலகுடனான தொடர்பும் நம்மை கேள்வி கேட்கத் தூண்டுகிறது. பூக்களின் வாசனையைக் கொண்டு வயதை அறியுமளவு நுட்பமும் துல்லிய புலனுணர்வும் கொண்ட கதைசொல்லி தனது முடிவுக்காலம் எனும் தருவாயில் சிலந்தி வலை பின்னுவதை முதல் முறையாகக் காண்கிறான். காண்பது ஒரு பெண்ணாகவும் இருக்கலாம் என்றாலும் படிக்கும் நமது இயல்புக்கு ஏற்ப பால் நிலைகளைச் சித்தரித்துக்கொள்ளும் சுதந்திரம் மாயயதார்த்தக் கதைக்கு உள்ளதால் அதை நாமும் சுவீகரித்துக்கொள்ளலாம். மெளனம் நிரம்பிய அந்த அறையில் காதறையும் அளவிற்கு சிம்பொனி ஒலியுடன் சிலந்தி வலை பின்னுகிறது. ஊடும்பாவுமாக காலத்தையும் அகாலத்தையும், ரூப

மென்பொருள் துறை பொட்டி தட்டும் வேலையா?

Image
மென்பொருள் துறை வேலையைப் பற்றி நம்மவர்களுக்குப் பொதுவான அபிப்பிராயங்கள் சிலது உண்டு. பொட்டி தட்டுவது, ஆண் பெண்கள் ஜாலியாக இருந்தபடி வேலை செய்வது, அள்ளி வாங்கும் பணத்தில் குடி, போதை என மிதமிஞ்சிய சல்லாபங்களில் ஈடுபடுவது, பிற துறைகளை அலட்சியம் செய்யும் மனப்பாங்கோடு இருப்பது என பலவிதமான கருத்துகள் உண்டு. பொதுவாகவே இவை கணினி துறை சார்ந்த வேலையில் இல்லாதவர்களின் கருத்தாக இருக்கும். பிற சேவை மையத்தொழில்கள் பற்றியும் இப்படிப்பட்ட அபிப்ராயங்களையும் இதே ஆட்கள் வைத்திருப்பதைக் காணலாம். பிபிஓ துறை பிரபலமானபோது இந்த விஷம் மேலும் அதிகமாகப் பரவி ஒரு தலைமுறையினரிடையே கணினித் துறை பற்றி மிக கீழ்த்தரமான கருத்துகள் பரவ வழிவகுத்தது. கிழக்குக்கடற்கரைச் சாலை எனும் பெயரில் கதைகளும, சினிமாக்களும் இத்துறை சார்ந்த அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களால் கீழ்த்தரமாக வசை பாடப்பட்டது. வழக்கம்போல இத்துறையில் இயங்கும் பெண்களே இவர்களின முதல் இலக்கு. இதனால் கணினித் துறையில் வேலை செய்பவர் என ஒரு அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது கவனமாக பிபிஓ அல்ல என ஒரு மறுப்பையும் சேர்த்துச் சொல்லத் தொடங்கினர். அதற்கு நானும் விதிவிலக்

மனத்திரைகளின் ஆட்டம் - சுரேஷ் பிரதீப் எழுதிய "சொட்டுகள்"

Image
சுரேஷ் பிரதீப்பின் சொட்டுகள் கதையின் நாயகி வளர்ந்து முதல் வேலைக்குப் போகும்வரை ஷவரில் குளித்ததில்லை . பக்கெட்டில் சேர்த்து வைத்த தண்ணீரில் மட்டுமே குளித்துவந்தவள். வேகமாக ஓடும் ஆற்றில், அருவியில் என நீரின் இயல்பான ஓட்டத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டது கிடையாது.   அவளது எந்த செயலும் அம்மாவைக் கோபப்படுத்தும். அதற்கான காரணங்கள் கதையில் இல்லாவிட்டாலும் நம்மால் ஊகிக்க முடிகிறது. குடும்ப வாழ்வினால் வீழ்ச்சியைச் சந்தித்த அவளது ஆற்றாமை கரிப்பாக எல்லார் மீதும் முடிகிறது வெளிப்படுகிறது. சிறு வயதிலிருந்து அப்படி சீண்டப்பட்டு வளர்ந்தவள் வேலைக்குச் செல்லும்போது வீம்புக்காக பூனாவில் வேலை தேடிக்கொள்கிறாள். தன்னை விட்டு விலக நினைக்கும் பெண் மீது சகலவிதமான அச்சுறுத்தல்களையும் அவளது அம்மா பிரயோகப்படுத்துகிறாள். அம்மாவுக்குத் தாங்க முடியாத வேதனை தருகிறது எனும் எண்ணமே பெண்ணின் வெற்றியாகிறது. அவளால் இயன்றவரை அம்மா மீது வன்மத்தை கொட்டுகிறாள். தன்னுள் விழுந்த சொட்டின் முதல் சுவையை அவள் அறிந்துவிட்டாள்.   முதல் முறை ஷவரில் குளிக்கும்போது புதுவிதமான நீரை அறிகிறாள். ஓடும

சுனில் கிருஷ்ணன் வாழ்த்துரை, அம்புப் படுக்கை விமர்சனம்.

Image
எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இலக்கிய உலகில் எனக்கிருக்கும் மிகச் சில நண்பர்களில் ஒருவர். நண்பர் நட்பாஸ் கூறியது போல , சுனில் பிறருடனான பொதுவான அடையாளங்களைக் கண்டடைந்து உரையாடுபவர். இலக்கிய செயல்பாடுகளில் தணியாத ஆர்வமும் தீவிரமும் கொண்டவர். அவருக்கு இந்த வருடத்தின் சாஹித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்திருப்பது எனக்கே கிடைத்தது போல மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சுனில் எழுதத் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து நாங்கள் உரையாடியபடி இருக்கிறோம். ஆம்னிபஸ் தளத்தில் இணைந்து பணியாற்றினோம். சொல்புதிது, பதாகை என பல குழுக்களில் தொடர்ந்து ஒன்றாய் பயணம் செய்திருக்கிறோம். ஆம்னிபஸ் செயல்பட்ட ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட தினமும் நாங்கள் மடலில் உரையாடியிருக்கிறோம், விவாதம் செய்திருக்கிறோம். நான் எழுதும் ஒவ்வொன்றையும் நண்பர் நட்பாஸும், சுனிலும் உடனடியாகப் படித்துக் கருத்து சொல்வார்கள். இன்று வாட்ஸப்பிலும் அது தொடர்கிறது. இத்தனை வருடத்தில் சுனிலின்  செயல் வேகம் குறையவில்லை; அதிகமாகியபடி இருந்திருக்கிறது. இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளராக, விமர்சகராக அவர் மாறியிருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் ச